Saturday, October 19, 2013

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சி!!

அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும் தான் பலருக்கும் நேரம் உள்ளது. ஆனால் உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. இதனால் பாதிப்படைய போவது உடல்.

ஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமானது. ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் கலவை தான் நல்ல கட்டமைப்போடு இருக்கும். நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்கும் போது உடற்பயிற்சியை மறந்தே விடுவோம். உணவிற்கு தரும் முக்கியத்துவத்தை போல் உடற்பயிற்சிக்கும் தர வேண்டும்.

உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைபாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சி உள்ளன. சில உடற்பயிற்சி ஆரோக்கியமான உடல் நலத்துக்கும், சில உடற்பயிற்சி நோயை குணப்படுத்தவும் உதவும். யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. இப்போது அத்தகைய உடற் பயிற்சியினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்! !

மன ஆரோக்கியத்திற்கு தினசரி 20-30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல், மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன நிலையையும் சிராக வைக்க உதவும்.

மேலும் புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. இதனால் அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற மனநோய்களிலிருந்து விடுபடலாம்.  வாழ்க்கையின் பின்னாட்களில் மனநோய் ஏற்பட்டாலும், அதை தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு.

உடலுறவில் ஆற்றல், உடலின் வலிமையையும் ஆற்றலும் அதிகரிக்கும். அதனால் துணைவியின் முன், ஆண்மையுடன் காட்சி அளிப்பீர்கள். மேலும் உடலுறவும் இன்பம் மிக்கதாக அமையும். சீரான முறையில் உடற்பயிற்சி செய்தால் பெண்களை கவர்வது மட்டுமல்லாமல், ஆண்மை குறைவு போன்றவற்றையும் தடுக்கலாம்.

உடற்பயிற்சி செய்தால் பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மனம் அமைதியாய் இருக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் கவலைகளும் நீங்கும் இன்பம் இருக்கும்.

உடற்பயிற்சி செய்தால், பல விதமான நோய்களில் இருந்து இதயம் பாதுகாப்பாக இருக்கும். பரம்பரையாக இதய நோய் இருந்தால், உடற்பயிற்சி செய்வதால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். அதனால் உடற்பயிற்சி செய்து,  இதய நோய்களை விட்டு விலகி இருக்கவும்.

 ஆரோக்கியமான உடல் எடையோடு இருப்பது தான் அனைவரின் கனவு. இதை அடைவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. தேவையான உடற்பயிற்சியுடன் சரியான உணவை உட்கொண்டால், உடல் கட்டமைப்போடு அழகாக காட்சியளிக்கும்.

உடல் எடையை குறைக்க மட்டும் உடற்பயிற்சி உதவுவதில்லை, அதிக எடை உள்ள வர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயை தடுக்கவும் உதவியாக இருக்கும். அதிலும் தினசரி உடற்பயிற்சி செய்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

 உயர் இரத்த அழுத்தத்தை `அமைதியான கொலைகாரன்' என்றும் அழைப்பர். உயர் ரத்த அழுத்தம் வராமால் தடுக்க சீரான முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மேலும் தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் ரத்தக் குழாய்கள் ஓய்வெடுக்க உதவுவதால் இரத்த அழுத்தம் வருவதையும் தடுக்கும்.

 அவ்வப்போது உடற்பயிற்சி செய்வதால் அதிகப்படியான வியர்வையானது, நம்மை சோர்வடைய செய்யும். ஆனால் தொடர்ச்சியாக செய்தோமானால் உடல் உறுதி அதிகரித்து, அயர்ச்சியை குறைக்கும். நோய் தடுப்பாற்றல் தொடச்சியாக உடற்பயிற்சி செய்தால், நோய் தடுப்பாற்றல் அமைப்பு அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பல வகையான நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

 உடற்பயிற்சி, உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருக்கும். அதிலும் உடல் தடித்தல், சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் வாதம் போன்ற பிரச்சனையில் இருந்து நம்மை காக்கும்.

Friday, October 18, 2013

லண்டன்: சிறுமியை கடத்தி, கற்பழித்த 84 வயது தாத்தா

லண்டன்: 10 வயது சிறுமியை சித்ரவதை செய்து, பாதாள அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த 84 வயது முதியவரைப் போலீசார் கைதுசெய்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் வாழ்ந்து வந்த இலியாஸ் அஸ்கார் (84) என்ற முதியவர், பாகிஸ்தானை சேர்ந்த 10 வயது உடல் ஊனமுற்ற சிறுமியை கடத்தி வந்து, தனது வீட்டின் பாதாள அறையில் அடைத்து வைத்துள்ளார். 
 
அச்சிறுமி காது கேளாத, வாய் பேச முடியாதவள் என்பதால் அவளால் யாரிடமும் உதவி கேட்க இயலாமல் போயுள்ளது. இந்நிலையில், இலியாஸ் மற்றும் அவரது மனைவி தால்லட் அஸ்கர் (68) ஆகியோர் சிறுமியை வேலைக்காரி போல் நடத்தி கொடுமைப் படுத்தியுள்ளனர். அச்சிறுமியின் ஊனத்தைக் காரணம் காட்டி அரசிடமிருந்தும் ரூ30 லட்சம் வரை சலுகைகள் பெற்றுள்ளனர் அத்தம்பதிகள். இதற்கிடையே அச்சிறுமியை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார் இலியாஸ். பலமுறை அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாராம் இலியாஸ். பின்னர், போலீசாரால் மீட்கப்பட்டாள் அச்சிறுமி. அதனைத் தொடர்ந்து, இலியாஸ் அஸ்கர், அவரது மனைவி தல்லாட் அஸ்கர், மகள் பாயிஷா அஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 
 
சிறுமியைக் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இவர்கள் மீது மான் செஸ்டர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, 13 பிரிவுகளில் அஸ்கர் மற்றும் அவரது குடும்பம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 23ம் தேதி தண்டனை விவரம் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Thursday, October 17, 2013

ஆப்பிள்: பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

"தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், எந்த நோயும் அண்டாது", என்று வழக்கத்தில் சொல்லுவதுண்டு. 
இது நிச்சயமாக பச்சை ஆப்பிளுக்குக் கூட உண்மையாகின்றது. இயற்கை தாய் நமக்கு வழங்கிய மிகவும் அற்புதமான பழங்களில் ஒன்று தான் ஆப்பிள். ஆப்பிள்களில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய இருப்பதால், ஒவ்வொருவரும் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். 
 
ஆப்பிள்கள் என்று வரும் போது, பல்வேறு வகையான ஆப்பிள்கள் உள்ளன. சிவப்பு வகை ஆப்பிள்கள் மிகவும் பொதுவாக காணப்படுகின்றன மற்றும் பச்சை நிற ஆப்பிள்கள் புளிப்பாக இருந்தாலும், சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும். 
 
பச்சை ஆப்பிள் தான் நீண்ட காலமாக ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த பழத்தில் தான் இயல்பாகவே பல்வேறு வகையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆகவே இப்போது அந்த பச்சை ஆப்பிளை சாப்பிடுவதால், கிடைக்கும் உடல்நல நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.